ரமேஷ் குமார் முந்திராவிலிருந்து பளார். சடக்கென்று திரும்பி பார்த்தேன். அடிபட்டது அமன். நானல்ல. அடிபட்டது அவன். வலி எனக்கு. அமன் இடது கையால் தனது இடது கன்னத்தையும் காதையும் தேய்த்துக்கொண்டிருந்தான். நிதின் ரத்தோர் காச்சு மூச்சென்று கத்திக்கொண்டிருந்தான் ஹிந்தியில். அமன் புத்தனாக அமைதி காத்தான். நான் காரை விட்டு வெளியே வந்து, "ஸ்டாப் இட்" கத்தினேன். நிதின் திரும்பி பார்த்தான். "ஒன்லி ஒன், சார்! நோ மோர்!" என்றான் அந்த மஹாராஷ்ட்ரியன். இள ரத்தம். சூடானது. ஒரு லாரி டிரைவர் அடிபடுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்னதான் தப்பு அவன்மேல் இருந்தாலும். ஏன் நிதின் அமனை அடித்தான்? மதியம் மூன்று மணி. சாப்பிட்டு, பாண் (paan) போட்டு கொண்டு முந்திரா நோக்கி பயணம். இன்னோவா வண்டி. Author flanked by Driver Nitin Rathor (on his right) and Cogoport Deepank Varshney டிரைவர் நிதின் ரத்தோர். அணிக்கெட் டிரைவர் நம்பர் இரண்டு. கோகோபோர்ட் அலுவலர் தீபாங்க வருஷனே.பிளஸ் நான். "அஞ்சறை மணிக்கு நாம் முந்திரா போயிடுவோம் இல்லை?" கேட்...