Skip to main content

Posts

8-பளார்!

ரமேஷ் குமார் முந்திராவிலிருந்து  பளார். சடக்கென்று திரும்பி பார்த்தேன். அடிபட்டது அமன். நானல்ல. அடிபட்டது அவன். வலி எனக்கு. அமன் இடது கையால் தனது இடது கன்னத்தையும் காதையும் தேய்த்துக்கொண்டிருந்தான். நிதின் ரத்தோர் காச்சு மூச்சென்று கத்திக்கொண்டிருந்தான் ஹிந்தியில். அமன் புத்தனாக அமைதி காத்தான். நான் காரை விட்டு வெளியே  வந்து, "ஸ்டாப் இட்" கத்தினேன். நிதின் திரும்பி பார்த்தான். "ஒன்லி ஒன், சார்! நோ மோர்!" என்றான் அந்த மஹாராஷ்ட்ரியன். இள ரத்தம். சூடானது. ஒரு லாரி டிரைவர் அடிபடுவதை  என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  என்னதான் தப்பு அவன்மேல் இருந்தாலும். ஏன் நிதின் அமனை அடித்தான்? மதியம் மூன்று மணி. சாப்பிட்டு, பாண் (paan) போட்டு கொண்டு முந்திரா நோக்கி பயணம். இன்னோவா வண்டி. Author flanked by Driver Nitin Rathor (on his right) and Cogoport Deepank Varshney டிரைவர் நிதின் ரத்தோர். அணிக்கெட் டிரைவர் நம்பர் இரண்டு. கோகோபோர்ட் அலுவலர் தீபாங்க வருஷனே.பிளஸ் நான். "அஞ்சறை மணிக்கு நாம் முந்திரா போயிடுவோம் இல்லை?" கேட்...
Recent posts

7- டிரைவர் நலம் விரும்பி, சிவசைலம் சார்!

ரமேஷ் குமார் டில்லியிலிருந்து இவர் சற்றே வித்தியாசமானவர். திருநெல்வேலிக்காரர். பெயர்: சிவசைலம். தொழில்: IAS அதிகாரி. கடந்த இரண்டு ஆண்டுகளாக, டில்லியில் வணிக அமைச்சரகத்தில் லாஜிஸ்டிஸ் செகிரேட்டரியாக பணி புரிகிறார். சித்திரை பிறந்தால் இவருடைஓய்வு காலம் துவங்கும். யார் கண்டது, மீண்டும் இவரை தொடரச் சொன்னாலும் சொல்லலாம். நரேந்திர மோடி அரசாங்கம் முதன் முறையாக லாஜிஸ்டிஸ் வளாகத்தை தொடங்கிய போது, இவரை தேர்ந்து எடுத்தது அந்த பதவிக்கு. கர்நாடக பணிநிலையை   (cadre)  சேர்த்தவர். எளிதாக வியாபாரம் செய்ய (Ease of Doing Business) என்ன செய்ய வேண்டும் என்பது இவருடைய குறி. ஏன்? நம் நாட்டில் லாஜிஸ்டிஸ் கட்டணம் மற்றைய தேசங்களை பார்க்கும்போது அதிகம். இதனால், நமது பொருட்கள் விலையும் ஜாஸ்தி. ஏன் இந்த கட்டணம் அதிகம் என்றால், ஏராளாமான இயலாமைகள் (inefficiencies). சிவசைலம் பதவி ஏற்றத்தில் இருந்து, ரொம்ப பிஸி. நிறையவே தில்லுமுல்லுகள் பார்க்க நேரிடுகிறது. எப்படி அதனை நீக்க முடியும் என்று சிந்தித்து செயல் படுகிறார். லாரி டிரைவர்களை பற்றி, நிறையவே கவனம். சமீபத்தில், இந்தியன் ஆயில்...

6-ஒரு உரையாடல் ரஜத் உபாயகருடன்

ரமேஷ் குமார் டில்லிலிருந்து ரஜத்  உபாயகர்.   இவரை தெரிந்திருக்க நியாயமில்லை.  25 வயது மும்பைக்கர்.  உயர் மட்ட மத்திய வர்க்கத்து இளைஞர்.  நிறைய படித்தவர்.  பத்திரிகைகளில் கொஞ்சம் காலம் பணி செய்தவர்.  திடிரெண்டு நாட்டை சுற்றி பார்க்கும் ஆசை ஏற்பட்டது.  லாரியில் போய் பார்த்தால் என்ன? யோசித்தார்.  சுமார் 6-7 மாதங்கள் பல லாரியில் இந்தியா பூரா சுற்றினார்.  பார்த்ததை புத்தகமாக போட்டார்.  டிரக் தே இந்தியா  சமீபத்தில்,  நான் அவருடன் உரையாடினேன்.  அதன் சுருக்கம் இதோ: ஏன் இந்த லாரி சுற்றுப்பயணம்? லாரி டிரைவர் ரொம்ப முக்கியமான அல்லது உன்னதன்மை காரியம் செய்கிறார்கள் நாட்டுக்கு. இருந்தாலும், அவர்களை பற்றி யாரும் எழுதுவது   இல்லை. அவர்களுடனும் பயணம் செய்து அவர்கள் இன்ப துன்பங்களை  அறிய ஆவல். இதன் மூலம் லாஜிஸ்டிஸ் செலவு பற்றி அறிய விரும்பினேன். இந்த பயணத்துக்கு முன்பு லாரி டிரைவர் பற்றி என்ன எண்ணினீர்கள்? குடிகாரர்கள். வேக கட்டுப்பாட்டை மதிக்காதவர்கள். விலை மாதர்களை அணுகுபவர்கள். இருந்தாலும்,...

5-மாற்றுங்கள் பழக்கவழக்கங்களை

ரமேஷ் குமார் டில்லிலிருந்து நாம எதிர்பாத்த வசதிகள்  அனைத்தும்  கிடைத்தாலும் அதை பயன் படுத்த (முறையாக) தெரிந்தும் தெரியாத பலர் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிராறர்கள். மற்றவர் நம்மை மதிக்கும் விதமாக நடந்துகொள்ளவே நமக்கு பயிற்ச்சி வேண்டும், என்று தமிழ்நாடு டிரைவர்  வெங்கடாச்சலம் என்னுடன் பேசும்போது டீவீடி(Tweet)னார்.  அவர் அப்படி சொல்ல காரணம் என்ன? ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? யோசிக்க ஆரம்பித்தேன். சமீபத்தில் நான் பதிவு செய்த சஸ்டைனபிலிட்டி (பேண்தகைமை) கருத்துபற்றி பேசுகையில்,பெரிய தொழில் அதிபர்கள் தங்கள் தொழிற்சாலைக்கு வெளியே டிரைவர் ரெஸ்ட் ரூம் .. கக்கூஸ் காட்டிக்கொடுக்க வில்லையென சொல்லி இருந்தேன். நூற்றுக்கு நூறு உண்மை. வெங்கடாச்சலம் அதற்கு பதில் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் சொல்வதும் உண்மைதான். டிரைவர் பழக்கவழக்கங்கள் சற்று வேறுபாடானதுதான். சந்தேகமில்லை. சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி நம் டிரைவர் சகோதரர்கள் அதனை நம்புவதாக தெரியவில்லை. அவர்களுடைய  சில பழக்கவழக்கங்கள் விசீற்றமானது.பெரும்பாலோனோர் காக்கி சீருடை அணிவதில்லை. சட்டப்படி அணியவேண...

4-சாலை விபத்துக்களும் அதன் விளைவுகளும்

ரமேஷ் குமார் டில்லியிலிருந்து  ரொம்ப நாளைக்கப்பறம், பாலகுமாரனோட இரும்பு குதிரைகள் புத்தகத்தை மீண்டும் திறந்தேன். அவர் இரும்பு குதிரைகளன்னு குறிப்பிடறது லாரிகளைத்தான். ஒரு டிரைவர், ஒரு கிளீனர் பத்தி அருமையா எழுதி இருக்கார். சில பக்கங்கள்தான். ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். கரீம்பாய் டிரைவர். செல்லத்தம்பி கிளீனர். வர வழியிலே கரீம்பாய் யார் மேலேயோ வண்டி ஏத்தி கொன்னுட்டார். நிறுத்தாம வந்துட்டார். சமீபத்தில் இரண்டாம் நிக்காஹ் ஆச்சு அவருக்கு. போலீஸ் கேஸ் ஆச்சுன்னா, ஜெயிலுக்கு போனும். செல்லத்தம்பி ஜெயிலுக்கு போக தயார். ஏன்? குரு தக்ஷிணை. கரீம்பாய்தானே அவனுக்கு ட்ரிவிங் கத்துக் கொடுத்தார். இந்த மாதிரி  விஷயம் ரொம்ப சகஜம் லாரி டிரைவர் கிளீனர் உலகத்திலே. என்ன? மிஞ்சி போனா கொஞ்சம் நாளைக்கு ஜெயிலுக்கு உள்ளே இருக்கணும். அப்பறம் முதலாளி ஜாமீனிலே வெளியே எடுப்பார். கோர்ட்க்கு கூப்பிடும் போதெல்லாம் போவணும். ஒகே. ஆசானுக்கு இது கூட செய்யலேன்னா? மனசை என்னோவோ பண்ணித்து. ஆக்சிடென்ட் ஆனா, லாரி டிரைவர் ஓடி போறது சர்வ சாதாரணம். இல்லைனா டிரைவர் ஐ அடிச்சு ஒதைச்சு உண்டு...

3-பிர்லாவும் சஸ்டைனபிலிட்டியும்

ரமேஷ் குமார் டில்லியிலிருந்து  இன்று லிஙகேடின் (LINKEDIN) சமூகத் தளத்தில், குமாரமங்கலம் பிர்லா ஒரு பதிவு செய்து இருந்தார். இவரை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. எனவே, ஒரு அறிமுகம் தேவைப் படவில்லை. இந்தப் பதிவில், அவர் பேண்தகைமை (சஸ்டைனபிலிட்டி/Sustainability) பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். "சஸ்டைனபிலிட்டி ஒரு நல்ல குடியுரிமை மட்டுமல்ல, ஒரு நல்ல வணிகம் கூட" ... சபாஷ், பிர்லா ஜி! நன்றாகவே சொன்னிர்கள். சஸ்டைனபிலிட்டி ஒரு முக்கியமான கருத்து. என்னை விவரிக்க விடுங்கள். நாம் இப்போது ஒரு அவுட்சோர்சிங்  (Outsourcing) மாடல் தயாரிப்பு முறையில் ஈடுப்பட்டு இருக்கிறோம். எந்த ஒரு பொருளும் பல பாகங்களைக்  கொண்டது. இப்பாகங்கள் பல்வேறு இடங்களில் பல சிறிய நடுத்தர தொழில் அதிபர்களால் தயாரிக்கப்பட்டு பெரிய தொழிற்சாலைகளை அடைந்து அங்கு ஒன்று சேர்க்கப்பட்டு சந்தைகளில் கிடைக்கும் பொருளாக விநியோகிக்கப்படுகிறது. இவை எல்லாம் சாத்தியம் ஆக, நல்ல சாலைகள் உள்ளன. நல்ல வண்டிகள் உள்ளன. ஆனாலும், நல்ல டிரைவர் வசதி இருக்கிறதா என்றால், என்னுடைய பதில் நெகடிவ் தான். ஏன்ன,  ஒரு தொழில் அதிபரும் ...

2-இந்தியன் ஆயில் சராய் விஜயம்

ரமேஷ் குமார் டில்லியிலிருந்து  சேலம்  AVR சர்க்கிள் , இந்தியன் ஆயில் fleet  மானேஜர் சைதன்யா கிருஷ்ணா என்னை  வரவேற்றார். பிரயாணக் களைப்பில் அன்று ஒய்வு எடுத்துக்கொண்டேன். மறுநாள் காலை, நாஷ்டாவுக்குப் பிறகு, இருவரும் நாமக்கல் பயணித்தோம். நேராக, சைதன்யா இந்தியன் ஆயில் டிரைவர் இளைப்பாறும் கோட்டத்துக்குக் கொண்டு சென்றார். ரொம்ப நல்ல வசதி. ஆனால், சுத்தமாக ஆள் நடமாட்டமே இல்லை. பல லக்ஷ ரூபாய் செலவில் கட்ட பட்ட வசதி; மேனேஜர் ஈஸ்வரன் சுற்றிக் காண்பித்தார். இந்த மாதிரியான டிரைவர் இளைப்பாறும் கோட்டங்களை - சராய் என்பர் இதனை ஹிந்தியில் அல்லது டிரைவர் ரெஸ்ட் ரூம் என்பர் ஆங்கிலத்தில் - நான் இந்தியாவின்  பல இடங்களில் பார்த்து இருக்கிறேன். இவை எல்லாமே இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் உருவாக்கியது. சராய் கட்டப் பட்டது ரொம்ப தூரம் சவாரி செய்யும் லாரி டிரைவர்களுக்காகத்தான்.  வழியில் இளைப்பாற. உணவு உண்ண. குளிக்க. துணி துவைக்க. கொஞ்சம் நேரம் தூங்க. அவர்கள் வண்டிகளை ஜாக்கிரதையாக வைத்து இருக்க. ஏனெனில், வண்டியில் இருக்கும் சரக்கு பாதுகாப்புக்காக. நல்ல யோசனை. ஆனாலும்...