Skip to main content

2-இந்தியன் ஆயில் சராய் விஜயம்



ரமேஷ் குமார் டில்லியிலிருந்து 

சேலம்  AVR சர்க்கிள் , இந்தியன் ஆயில் fleet  மானேஜர் சைதன்யா கிருஷ்ணா என்னை  வரவேற்றார். பிரயாணக் களைப்பில் அன்று ஒய்வு எடுத்துக்கொண்டேன்.

மறுநாள் காலை, நாஷ்டாவுக்குப் பிறகு, இருவரும் நாமக்கல் பயணித்தோம். நேராக, சைதன்யா இந்தியன் ஆயில் டிரைவர் இளைப்பாறும் கோட்டத்துக்குக் கொண்டு சென்றார். ரொம்ப நல்ல வசதி. ஆனால், சுத்தமாக ஆள் நடமாட்டமே இல்லை. பல லக்ஷ ரூபாய் செலவில் கட்ட பட்ட வசதி; மேனேஜர் ஈஸ்வரன் சுற்றிக் காண்பித்தார்.

இந்த மாதிரியான டிரைவர் இளைப்பாறும் கோட்டங்களை - சராய் என்பர் இதனை ஹிந்தியில் அல்லது டிரைவர் ரெஸ்ட் ரூம் என்பர் ஆங்கிலத்தில் - நான் இந்தியாவின்  பல இடங்களில் பார்த்து இருக்கிறேன். இவை எல்லாமே இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் உருவாக்கியது.

சராய் கட்டப் பட்டது ரொம்ப தூரம் சவாரி செய்யும் லாரி டிரைவர்களுக்காகத்தான்.  வழியில் இளைப்பாற. உணவு உண்ண. குளிக்க. துணி துவைக்க. கொஞ்சம் நேரம் தூங்க. அவர்கள் வண்டிகளை ஜாக்கிரதையாக வைத்து இருக்க. ஏனெனில், வண்டியில் இருக்கும் சரக்கு பாதுகாப்புக்காக. நல்ல யோசனை.

ஆனாலும், இந்த முயற்சி முழு வெற்றி பெறவில்லை. ஏன்? பல காரணங்கள். இதோ, என் மனதில் பட்டவை:  இந்த சராய் பராமரிப்பு அந்த பம்ப் மனஜரின் கடமை. நிறைய மனஜர்கள் என்னிடம் பேசுகையில் சொன்னது என்னவென்றால் அவர்களால் சரியாக மார்க்கெட்டிங் செய்ய இயல வில்லை.

மற்றொரு காரணம்: இந்த வசதிகளை அனுபவிக்க டிரைவர் இந்தியன் ஆயில் உடைய fleet அட்டை வைத்து இருக்க வேண்டும். அதாவது அவர்கள் இந்த பம்பில் டீசல் போட வேண்டும். (சமீபத்தில், இந்த கட்டளை நீக்க பட்டது.)

இந்த நாமக்கல் சராய் பற்றி பேசுகையில் இந்தியன் ஆயில் அதிகாரிகள் சொன்னது என்ன வென்றால்: (௧) இந்த பம்ப், நாமக்கல் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது. நாமக்கல் ஒரு பெரிய லாரி மையம். பல ஆயிரம் வண்டிகள் உள்ள ஊர். இந்தியாவிலேயே பேசப்படுகிற பெரிய லாரி மையம்.

எனவே, நாமக்கல் வண்டிக்காரர்கள் அவர்கள் வீட்டிலேயே தங்குவர். அவர்களுக்கு இந்த வசதி தேவை இல்லை. ஒகே. இந்த நெடுஞ்சாலை வழியாக தென் மாநிலம் செல்லும் வண்டிகள் ஏன் இந்த வசதிகளை உபயோகிப்பதில்லை? நல்ல கேள்வி. சரியான பதில் ஒன்றும் கிடைக்க வில்லை.

கிட்ட தட்ட பத்து ஆண்டு காலமாக நான் சுமார் 2௦௦,௦௦௦ கிலோமீட்டர் பாரத நெடுஞசாலைகளில் பயணித்து இருக்கிறேன். சுமார் 25 சராய் பார்த்து  இருக்கிறேன் வேறு வேறு மாநிலங்களில். கதை ஒன்றுதான்.

இந்த சராய் ஏன் முக்கியம்? லாரி டிரைவர் ஓட்டும் வண்டிகள் அந்நிய நாடுகள் போல குளிர் வசதி பொருத்தப்பட்டவை அல்ல. நமது தேசம் வெப்ப பிரதேசம். எப்பவுமே சூடு. வண்டிக்கு வெளியே சூடு. வண்டிக்கு உள்ளேயும் சூடு. சரியான காற்றோட்டம் கிடையாது. ஏன்? மின் விசிறி கூட இருக்காது. வேண்டும் என்றால், டிரைவர் போட்டுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் 9௦ விழுக்காடு வண்டிகள் ரொம்ப சின்ன சின்ன முதலாளிகள் உடையது. வண்டி சத்தம் (வாடகை அல்லது கூலி) ரொம்ப குறைச்சல். எனவே வண்டி உள்ளே நிறைய வசதிகள் செய்ய இயலாது என்று ஒரு வாதம்.

இந்த மாதிரியான சூடான வண்டி ஓட்டுவது கடினம். களைப்பு அதிகம். இந்த களைப்பு டிரைவர் திறனைப் பாதிக்கும். விபத்து ஏற்பட அதிக சாத்தியம். இந்த மாதிரி விபத்துக்களை தடுக்க, சாராய் உதவும். இப்போது புரிகிறதா ஏன் இந்த சராய் சர்ச்சை?

(தொடரும்

Comments

Popular posts from this blog

6-ஒரு உரையாடல் ரஜத் உபாயகருடன்

ரமேஷ் குமார் டில்லிலிருந்து ரஜத்  உபாயகர்.   இவரை தெரிந்திருக்க நியாயமில்லை.  25 வயது மும்பைக்கர்.  உயர் மட்ட மத்திய வர்க்கத்து இளைஞர்.  நிறைய படித்தவர்.  பத்திரிகைகளில் கொஞ்சம் காலம் பணி செய்தவர்.  திடிரெண்டு நாட்டை சுற்றி பார்க்கும் ஆசை ஏற்பட்டது.  லாரியில் போய் பார்த்தால் என்ன? யோசித்தார்.  சுமார் 6-7 மாதங்கள் பல லாரியில் இந்தியா பூரா சுற்றினார்.  பார்த்ததை புத்தகமாக போட்டார்.  டிரக் தே இந்தியா  சமீபத்தில்,  நான் அவருடன் உரையாடினேன்.  அதன் சுருக்கம் இதோ: ஏன் இந்த லாரி சுற்றுப்பயணம்? லாரி டிரைவர் ரொம்ப முக்கியமான அல்லது உன்னதன்மை காரியம் செய்கிறார்கள் நாட்டுக்கு. இருந்தாலும், அவர்களை பற்றி யாரும் எழுதுவது   இல்லை. அவர்களுடனும் பயணம் செய்து அவர்கள் இன்ப துன்பங்களை  அறிய ஆவல். இதன் மூலம் லாஜிஸ்டிஸ் செலவு பற்றி அறிய விரும்பினேன். இந்த பயணத்துக்கு முன்பு லாரி டிரைவர் பற்றி என்ன எண்ணினீர்கள்? குடிகாரர்கள். வேக கட்டுப்பாட்டை மதிக்காதவர்கள். விலை மாதர்களை அணுகுபவர்கள். இருந்தாலும்,...

4-சாலை விபத்துக்களும் அதன் விளைவுகளும்

ரமேஷ் குமார் டில்லியிலிருந்து  ரொம்ப நாளைக்கப்பறம், பாலகுமாரனோட இரும்பு குதிரைகள் புத்தகத்தை மீண்டும் திறந்தேன். அவர் இரும்பு குதிரைகளன்னு குறிப்பிடறது லாரிகளைத்தான். ஒரு டிரைவர், ஒரு கிளீனர் பத்தி அருமையா எழுதி இருக்கார். சில பக்கங்கள்தான். ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். கரீம்பாய் டிரைவர். செல்லத்தம்பி கிளீனர். வர வழியிலே கரீம்பாய் யார் மேலேயோ வண்டி ஏத்தி கொன்னுட்டார். நிறுத்தாம வந்துட்டார். சமீபத்தில் இரண்டாம் நிக்காஹ் ஆச்சு அவருக்கு. போலீஸ் கேஸ் ஆச்சுன்னா, ஜெயிலுக்கு போனும். செல்லத்தம்பி ஜெயிலுக்கு போக தயார். ஏன்? குரு தக்ஷிணை. கரீம்பாய்தானே அவனுக்கு ட்ரிவிங் கத்துக் கொடுத்தார். இந்த மாதிரி  விஷயம் ரொம்ப சகஜம் லாரி டிரைவர் கிளீனர் உலகத்திலே. என்ன? மிஞ்சி போனா கொஞ்சம் நாளைக்கு ஜெயிலுக்கு உள்ளே இருக்கணும். அப்பறம் முதலாளி ஜாமீனிலே வெளியே எடுப்பார். கோர்ட்க்கு கூப்பிடும் போதெல்லாம் போவணும். ஒகே. ஆசானுக்கு இது கூட செய்யலேன்னா? மனசை என்னோவோ பண்ணித்து. ஆக்சிடென்ட் ஆனா, லாரி டிரைவர் ஓடி போறது சர்வ சாதாரணம். இல்லைனா டிரைவர் ஐ அடிச்சு ஒதைச்சு உண்டு...

5-மாற்றுங்கள் பழக்கவழக்கங்களை

ரமேஷ் குமார் டில்லிலிருந்து நாம எதிர்பாத்த வசதிகள்  அனைத்தும்  கிடைத்தாலும் அதை பயன் படுத்த (முறையாக) தெரிந்தும் தெரியாத பலர் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிராறர்கள். மற்றவர் நம்மை மதிக்கும் விதமாக நடந்துகொள்ளவே நமக்கு பயிற்ச்சி வேண்டும், என்று தமிழ்நாடு டிரைவர்  வெங்கடாச்சலம் என்னுடன் பேசும்போது டீவீடி(Tweet)னார்.  அவர் அப்படி சொல்ல காரணம் என்ன? ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? யோசிக்க ஆரம்பித்தேன். சமீபத்தில் நான் பதிவு செய்த சஸ்டைனபிலிட்டி (பேண்தகைமை) கருத்துபற்றி பேசுகையில்,பெரிய தொழில் அதிபர்கள் தங்கள் தொழிற்சாலைக்கு வெளியே டிரைவர் ரெஸ்ட் ரூம் .. கக்கூஸ் காட்டிக்கொடுக்க வில்லையென சொல்லி இருந்தேன். நூற்றுக்கு நூறு உண்மை. வெங்கடாச்சலம் அதற்கு பதில் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் சொல்வதும் உண்மைதான். டிரைவர் பழக்கவழக்கங்கள் சற்று வேறுபாடானதுதான். சந்தேகமில்லை. சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி நம் டிரைவர் சகோதரர்கள் அதனை நம்புவதாக தெரியவில்லை. அவர்களுடைய  சில பழக்கவழக்கங்கள் விசீற்றமானது.பெரும்பாலோனோர் காக்கி சீருடை அணிவதில்லை. சட்டப்படி அணியவேண...