ரமேஷ் குமார் டில்லியிலிருந்து
ரொம்ப நாளைக்கப்பறம், பாலகுமாரனோட இரும்பு குதிரைகள் புத்தகத்தை மீண்டும் திறந்தேன். அவர் இரும்பு குதிரைகளன்னு குறிப்பிடறது லாரிகளைத்தான்.
ஒரு டிரைவர், ஒரு கிளீனர் பத்தி அருமையா எழுதி இருக்கார். சில பக்கங்கள்தான். ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.
கரீம்பாய் டிரைவர். செல்லத்தம்பி கிளீனர்.
வர வழியிலே கரீம்பாய் யார் மேலேயோ வண்டி ஏத்தி கொன்னுட்டார். நிறுத்தாம வந்துட்டார்.
சமீபத்தில் இரண்டாம் நிக்காஹ் ஆச்சு அவருக்கு.
போலீஸ் கேஸ் ஆச்சுன்னா, ஜெயிலுக்கு போனும்.
செல்லத்தம்பி ஜெயிலுக்கு போக தயார். ஏன்? குரு தக்ஷிணை. கரீம்பாய்தானே அவனுக்கு ட்ரிவிங் கத்துக் கொடுத்தார்.
இந்த மாதிரி விஷயம் ரொம்ப சகஜம் லாரி டிரைவர் கிளீனர் உலகத்திலே.
என்ன? மிஞ்சி போனா கொஞ்சம் நாளைக்கு ஜெயிலுக்கு உள்ளே இருக்கணும். அப்பறம் முதலாளி ஜாமீனிலே வெளியே எடுப்பார். கோர்ட்க்கு கூப்பிடும் போதெல்லாம் போவணும். ஒகே. ஆசானுக்கு இது கூட செய்யலேன்னா?
மனசை என்னோவோ பண்ணித்து.
ஆக்சிடென்ட் ஆனா, லாரி டிரைவர் ஓடி போறது சர்வ சாதாரணம். இல்லைனா டிரைவர் ஐ அடிச்சு ஒதைச்சு உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.
இந்த மாதிரி, ஆக்சிடென்ட் ஆகும் பட்சத்தில், டிரைவர் என்ன பண்ணனும்?
என்னதான், மத்தவங்களுடைய தப்பா இருந்தாலும் லாரி டிரைவர்ஐ தான் அடிப்பாங்க. எனவே, வண்டியை விட்டு விட்டு இறங்கி ஓடிப்போனும். எங்கே? கிட்ட இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்க்கு . சரண்டர் ஆகணும். சரக்கு? முதல்லே டிரைவர் தன்னோட உயிரை காப்பாத்திக்கணும். மத்ததெல்லாம் பிறகுதான்.
ஊர்க்காரங்க அடிக்க வந்தாலும், போலீஸ் பாதுகாப்பு இருக்கும்.
ஆக்சிடெண்ட்லே உயிர் சேதம் ஏற்பட்டால், கொஞ்சம் நாள் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும். மாஜிஸ்திரேட் கோர்ட்லே விசாரிக்கப்பட்டு, ஜாமீன்லே வெளியிலே வர சாத்தியம். எப்பல்லாம் கேஸ் விசாரணைக்கு வருமோ, அப்பல்லாம் ஆஜர் ஆகணும். கஷ்டம்தான். வேற வழி இல்லை.
ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேச விரும்பறேன்.
எந்த ஒரு காரணத்துக்காகவும் கேஸ் ஆகும் போகும்போது ஒரு பிரச்சினை உருவாகும். எந்த ஊரிலே ஆக்சிடென்ட் ஆச்சோ அந்த ஊர் லோக்கல் நபர் கேரண்டி (guarantee) கொடுக்கணும். அந்த மாதிரி லோக்கல் நபர் கிடைக்கிறது அதனை சுலபம் இல்லை. ஏதோ ஒரு மாதிரி அந்த லோக்கல் நபரை பணம் கொடுத்தாவது பிடிச்சாவனும்.
இன்றைக்கு, எல்லாருக்கும் ஆதார் அட்டை இருக்கு. வோட்டர் அட்டை இருக்கு. பேன் (PAN) அட்டை கூட இருக்கும். இந்த மாதிரி ஆதார பூர்வமான அத்தாச்சி இருக்கும்போது எதுக்கு லோக்கல் நபர் கேரண்டி? புரியலை.
இது சம்பந்தமா தமிழ்நாடு லாரி ஓனர் சங்கங்கள் சென்ட்ரல் அரசாங்கத்துக்கு எழுதணும்.
சாலை விபத்துக்கள் ரொம்ப சாதாரணம். அடிக்கடி நடக்கிறது. அவசியமா கவனிக்க படவேண்டிய விஷயம்.
(தொடரும்)

Comments
Post a Comment