ரமேஷ் குமார் டில்லிலிருந்து
ரஜத் உபாயகர்.
இவரை தெரிந்திருக்க நியாயமில்லை.
25 வயது மும்பைக்கர்.
உயர் மட்ட மத்திய வர்க்கத்து இளைஞர்.
நிறைய படித்தவர்.
பத்திரிகைகளில் கொஞ்சம் காலம் பணி செய்தவர்.
திடிரெண்டு நாட்டை சுற்றி பார்க்கும் ஆசை ஏற்பட்டது.
லாரியில் போய் பார்த்தால் என்ன? யோசித்தார்.
சுமார் 6-7 மாதங்கள் பல லாரியில் இந்தியா பூரா சுற்றினார்.
பார்த்ததை புத்தகமாக போட்டார். டிரக் தே இந்தியா
சமீபத்தில், நான் அவருடன் உரையாடினேன்.
அதன் சுருக்கம் இதோ:
ஏன் இந்த லாரி சுற்றுப்பயணம்?
லாரி டிரைவர் ரொம்ப முக்கியமான அல்லது உன்னதன்மை காரியம் செய்கிறார்கள் நாட்டுக்கு. இருந்தாலும், அவர்களை பற்றி யாரும் எழுதுவது இல்லை. அவர்களுடனும் பயணம் செய்து அவர்கள் இன்ப துன்பங்களை அறிய ஆவல். இதன் மூலம் லாஜிஸ்டிஸ் செலவு பற்றி அறிய விரும்பினேன்.
இந்த பயணத்துக்கு முன்பு லாரி டிரைவர் பற்றி என்ன எண்ணினீர்கள்?
குடிகாரர்கள். வேக கட்டுப்பாட்டை மதிக்காதவர்கள். விலை மாதர்களை அணுகுபவர்கள். இருந்தாலும், என் உள்மனம் இன்னும் ஏதேதோ இருக்கும்னு சொல்லிற்று. அதனால்தான் இந்த லாரி பயணம்.
*பயணத்திற்கு பிறகு, என்ன மாற்றங்கள்? *
கட்டாயமா, அவர்கள் குடிகாரர்கள் அல்ல. கடும் உழைப்பாளிகள். நேர்மையான தொழில் செய்பவர்கள், சமூகம் அவர்களை சந்தேகத்துடனும் வெறுப்புடனும் பார்த்தாலும். அவர்களை பற்றி தப்பான அபிப்ராயம் பரவி விட்டது.
அரசாங்கம் லாரி டிரைவர் சமூகத்துக்கு ஏதாவது உருப்படியாக அவர்களுடைய வேலை குறித்து, வாழ்க்கை குறித்து செய்கிறதா?
சுருக்கமாக சொன்னால், இல்லை என்பதுதான் என் பதில். ஏன்னென்றால், அவர்கள் சௌபாக்கியம் அரசாங்கத்தின் முன்னுரிமை (PRIORITY ) இல்லை. ஏன்? நாடு முழுதும் டிரைவர் கள் ஒன்று சேரவில்லை. அவர்கள் ஒரு வோட் வங்கியாக அரசியல்வாதிகள் பார்க்க வில்லை. எனவே, ஒரு கவனிப்பு கிடைக்க வில்லை.
மோட்டார் அதிபர்களுக்கும் டிரைவர் களுக்கும் இடையேயுள்ள உறவு பற்றி...
என் கணிப்பு இவர்களுக்கு இடையே ஒரு சங்கடமான சண்டை ( UNEASY TRUCE). முதலாளிகளுக்கு நன்றா தெரியும் டிரைவர் கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று. ஆனாலும் ஒன்றும் சொல்வதில்லை. ஏன்? அவர்கள் கொடுக்கும் சம்பளம் ரொம்ப குறைச்சல். சில உறவுகள் பிரமாதம். டிரைவர் கஞ்சா அடிப்பது தெரியும். டிரைவர் மூலமாக சரக்கு கேட்டு வாங்கிப்பார்கள் பஞ்சாப் ராஜஸ்தான் போற டிரைவர் கிட்டே இருந்து.
நீங்க டிரான்ஸ்போர்ட் மந்த்ரியாக இருந்தால், என்ன அஞ்சு காரியங்கள் செய்வீங்க?
௧. நெடுஞசாலைகள் டிரைவர் ரெஸ்ட் ரூம் - தங்க வசதி - பண்ணி கொடுப்பேன். இதன் மூலம், அவர்கள் சுய மரியாதை கூடும். நன்றாக இளைப்பாற முடியும். தூக்கம் இன்மையினால் ஏற்படும் அயர்ச்சி குறையும். அதனால், விபத்துக்கள் குறையும். உற்பத்தித்திறன் உயரும்.
௨. ஊழல் புரியும் சாலை அதிகாரிகளை ஒழிப்பேன். இந்த முயற்சி டிரைவர் களுக்கு பக்கபலமா இருக்கும்.
௩. டிரைவர் கலை சமூக பாதுகாப்பு வலைக்குள் கொண்டு வருவேன்.
௪. புரோக்கர் ஒன்று சேர்ந்து டிரைவர் கலை கொள்ளை அடிப்பதை தடுப்பேன்.
௫.டிரைவர் ட்ரைனிங் பள்ளிகள் தொடங்கி, சரியாய் வகையில் பாடம் சொல்லி குடுத்து, நல்ல கொம்பனிகனில் வேலை வாய்ப்பு பெற முயற்சிப்பேன்.
நன்றி, ராஜேஷ்!
உங்களுக்கும் நன்றி

Comments
Post a Comment