Skip to main content

7- டிரைவர் நலம் விரும்பி, சிவசைலம் சார்!



ரமேஷ் குமார் டில்லியிலிருந்து

இவர் சற்றே வித்தியாசமானவர்.
திருநெல்வேலிக்காரர்.
பெயர்: சிவசைலம்.
தொழில்: IAS அதிகாரி.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, டில்லியில் வணிக அமைச்சரகத்தில் லாஜிஸ்டிஸ் செகிரேட்டரியாக பணி புரிகிறார். சித்திரை பிறந்தால் இவருடைஓய்வு காலம் துவங்கும். யார் கண்டது, மீண்டும் இவரை தொடரச் சொன்னாலும் சொல்லலாம்.

நரேந்திர மோடி அரசாங்கம் முதன் முறையாக லாஜிஸ்டிஸ் வளாகத்தை தொடங்கிய போது, இவரை தேர்ந்து எடுத்தது அந்த பதவிக்கு. கர்நாடக பணிநிலையை   (cadre)  சேர்த்தவர்.

எளிதாக வியாபாரம் செய்ய (Ease of Doing Business) என்ன செய்ய வேண்டும் என்பது இவருடைய குறி. ஏன்? நம் நாட்டில் லாஜிஸ்டிஸ் கட்டணம் மற்றைய தேசங்களை பார்க்கும்போது அதிகம். இதனால், நமது பொருட்கள் விலையும் ஜாஸ்தி. ஏன் இந்த கட்டணம் அதிகம் என்றால், ஏராளாமான இயலாமைகள் (inefficiencies).

சிவசைலம் பதவி ஏற்றத்தில் இருந்து, ரொம்ப பிஸி. நிறையவே தில்லுமுல்லுகள் பார்க்க நேரிடுகிறது. எப்படி அதனை நீக்க முடியும் என்று சிந்தித்து செயல் படுகிறார்.

லாரி டிரைவர்களை பற்றி, நிறையவே கவனம். சமீபத்தில், இந்தியன் ஆயில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய சராய் விவரங்களை கேட்டு வாங்கி, ஹைவெய்ஸ் ஹீரோஸ் (Highway Heroes) எனும் நிறுவனத்துடன் லாரி டிரைவர் களுக்கு சரியான இளைப்பாறும் வசதி நிலையங்களை உபயோகத்தில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் இந்தியன் ஆயில் சராய் உள்ளது. ஆனால் சரியாய் பயன்படுத்த படவில்லை. சிவசைலம் இந்த மாதிரி அரசாங்க சொத்துக்களை எப்படி சரியாய் உபயோகிப்பது பற்றி செயல் படுத்த விரும்புகிறார்.

இந்தியன் ஆயில் நிறுவனமும் இந்த முயற்சியில் ஆர்வம் காட்டுகிறது.

என்ன தொடர்பு இந்த சாராய்க்கும் சிவசைலத்துக்கும்? 

 நன்கு இளைப்பாறி வண்டி ஓட்டும் டிரைவர் விபத்துக்கு காரணம்  ஆகமாட்டார். வருடம்தோறும் இந்தியாவில் 15௦,௦௦௦ (ஒன்றரை லக்ஷம்) மரணம் சம்பவிக்கிறது விபத்தினால். இதை பாதியாக குறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

விபத்துகளால் நமது தேசத்துக்கு ஏகப்பட்ட நஷ்டம். சுமார் மூன்று விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP )  . பல லக்ஷ கோடி ரூபாய் விநயம். தேவை இல்லாதது. நஷ்டத்தை குறைத்தால், லாபம் தானாகவே அதிகரிக்கும். எனவே, சிவசைலம் இந்த சராய்களை உபயோகிக்க விரும்புகிறார்.

அவர் முயற்சியில் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

Comments

Popular posts from this blog

6-ஒரு உரையாடல் ரஜத் உபாயகருடன்

ரமேஷ் குமார் டில்லிலிருந்து ரஜத்  உபாயகர்.   இவரை தெரிந்திருக்க நியாயமில்லை.  25 வயது மும்பைக்கர்.  உயர் மட்ட மத்திய வர்க்கத்து இளைஞர்.  நிறைய படித்தவர்.  பத்திரிகைகளில் கொஞ்சம் காலம் பணி செய்தவர்.  திடிரெண்டு நாட்டை சுற்றி பார்க்கும் ஆசை ஏற்பட்டது.  லாரியில் போய் பார்த்தால் என்ன? யோசித்தார்.  சுமார் 6-7 மாதங்கள் பல லாரியில் இந்தியா பூரா சுற்றினார்.  பார்த்ததை புத்தகமாக போட்டார்.  டிரக் தே இந்தியா  சமீபத்தில்,  நான் அவருடன் உரையாடினேன்.  அதன் சுருக்கம் இதோ: ஏன் இந்த லாரி சுற்றுப்பயணம்? லாரி டிரைவர் ரொம்ப முக்கியமான அல்லது உன்னதன்மை காரியம் செய்கிறார்கள் நாட்டுக்கு. இருந்தாலும், அவர்களை பற்றி யாரும் எழுதுவது   இல்லை. அவர்களுடனும் பயணம் செய்து அவர்கள் இன்ப துன்பங்களை  அறிய ஆவல். இதன் மூலம் லாஜிஸ்டிஸ் செலவு பற்றி அறிய விரும்பினேன். இந்த பயணத்துக்கு முன்பு லாரி டிரைவர் பற்றி என்ன எண்ணினீர்கள்? குடிகாரர்கள். வேக கட்டுப்பாட்டை மதிக்காதவர்கள். விலை மாதர்களை அணுகுபவர்கள். இருந்தாலும்,...

4-சாலை விபத்துக்களும் அதன் விளைவுகளும்

ரமேஷ் குமார் டில்லியிலிருந்து  ரொம்ப நாளைக்கப்பறம், பாலகுமாரனோட இரும்பு குதிரைகள் புத்தகத்தை மீண்டும் திறந்தேன். அவர் இரும்பு குதிரைகளன்னு குறிப்பிடறது லாரிகளைத்தான். ஒரு டிரைவர், ஒரு கிளீனர் பத்தி அருமையா எழுதி இருக்கார். சில பக்கங்கள்தான். ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். கரீம்பாய் டிரைவர். செல்லத்தம்பி கிளீனர். வர வழியிலே கரீம்பாய் யார் மேலேயோ வண்டி ஏத்தி கொன்னுட்டார். நிறுத்தாம வந்துட்டார். சமீபத்தில் இரண்டாம் நிக்காஹ் ஆச்சு அவருக்கு. போலீஸ் கேஸ் ஆச்சுன்னா, ஜெயிலுக்கு போனும். செல்லத்தம்பி ஜெயிலுக்கு போக தயார். ஏன்? குரு தக்ஷிணை. கரீம்பாய்தானே அவனுக்கு ட்ரிவிங் கத்துக் கொடுத்தார். இந்த மாதிரி  விஷயம் ரொம்ப சகஜம் லாரி டிரைவர் கிளீனர் உலகத்திலே. என்ன? மிஞ்சி போனா கொஞ்சம் நாளைக்கு ஜெயிலுக்கு உள்ளே இருக்கணும். அப்பறம் முதலாளி ஜாமீனிலே வெளியே எடுப்பார். கோர்ட்க்கு கூப்பிடும் போதெல்லாம் போவணும். ஒகே. ஆசானுக்கு இது கூட செய்யலேன்னா? மனசை என்னோவோ பண்ணித்து. ஆக்சிடென்ட் ஆனா, லாரி டிரைவர் ஓடி போறது சர்வ சாதாரணம். இல்லைனா டிரைவர் ஐ அடிச்சு ஒதைச்சு உண்டு...

5-மாற்றுங்கள் பழக்கவழக்கங்களை

ரமேஷ் குமார் டில்லிலிருந்து நாம எதிர்பாத்த வசதிகள்  அனைத்தும்  கிடைத்தாலும் அதை பயன் படுத்த (முறையாக) தெரிந்தும் தெரியாத பலர் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிராறர்கள். மற்றவர் நம்மை மதிக்கும் விதமாக நடந்துகொள்ளவே நமக்கு பயிற்ச்சி வேண்டும், என்று தமிழ்நாடு டிரைவர்  வெங்கடாச்சலம் என்னுடன் பேசும்போது டீவீடி(Tweet)னார்.  அவர் அப்படி சொல்ல காரணம் என்ன? ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? யோசிக்க ஆரம்பித்தேன். சமீபத்தில் நான் பதிவு செய்த சஸ்டைனபிலிட்டி (பேண்தகைமை) கருத்துபற்றி பேசுகையில்,பெரிய தொழில் அதிபர்கள் தங்கள் தொழிற்சாலைக்கு வெளியே டிரைவர் ரெஸ்ட் ரூம் .. கக்கூஸ் காட்டிக்கொடுக்க வில்லையென சொல்லி இருந்தேன். நூற்றுக்கு நூறு உண்மை. வெங்கடாச்சலம் அதற்கு பதில் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் சொல்வதும் உண்மைதான். டிரைவர் பழக்கவழக்கங்கள் சற்று வேறுபாடானதுதான். சந்தேகமில்லை. சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி நம் டிரைவர் சகோதரர்கள் அதனை நம்புவதாக தெரியவில்லை. அவர்களுடைய  சில பழக்கவழக்கங்கள் விசீற்றமானது.பெரும்பாலோனோர் காக்கி சீருடை அணிவதில்லை. சட்டப்படி அணியவேண...